நன்றி!!

தொடர்ந்து வந்து கட்டுரைகளைப் படித்து பின்னூட்டமிடும்- பின்னூட்டமிடாத அனைவருக்கும் நன்றி.

கடமை

நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்     

Wednesday, May 11, 2011

மீண்டும் உடைந்தது பல்சக்கரம்: ஊட்டி மலை ரயில் ரத்து


ஊட்டி: தண்டவாளப் பல் சக்கரம் உடைந்ததால் ஊட்டி மலை ரயில் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஊட்டி மலை ரயில்:

ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவர்வது மலை ரயில். மேட்டுப்பாளையத்தில் துவங்கி குன்னூர் வழியாக ஊட்டி வரை செல்லும் 


இந்த மலை ரயில் பசுமையான காடுகள், கணவாய்கள் ஆகியவற்றை ஊடறுத்துச் செல்வதால் இதில் பயணிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.

அடுத்தடுத்து செயலிழப்பு:

இந்த முறை சீசன் துவங்கியதிலிருந்தே இந்த ரயில் அடிக்கடி நின்று போவது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் தடம் புரண்டதால் ஒருவாரகாலமாக தண்டவாளம் சீரமைக்கப்பட்டு நேற்றுத்தான் போக்குவரத்து துவங்கியது.

உடைந்துபோன பல் சக்கரம்:

இந்நிலையில் நேற்றைய பயணத்தின்போது பீனியன் வீல் எனப்படும் தண்டவாளப் பல்சக்கரம் சேதம் அடைந்தது. மலையேற்றத்தின்போது ரயில் தானாகவே பின்வராமல் இருக்க தாங்கிப்பிடிப்பதே பீனியன் வீலின் பணி. ரண்ணிமேடு பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது தண்டவாளம் உடைந்திருப்பதை ரயில் ஓட்டுனர் நசுரூதின் கண்டுபிடித்தார். இதனை அடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது.

வருகிறது அதிகாரிகள் குழு:

அடுத்தடுத்து ரயில் நிறுத்தப்படுவதால், சென்னையிலிருந்து ரயில்வே அதிகாரிகள் இன்று குன்னூருக்கு வர இருக்கிறார்கள். இது தொடர்பாக அவர்கள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகள் எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 comment:

Speed Master said...

மறுபடியுமா
2 நாளைக்கு முன் தான் ஆரம்பிச்சாங்க