மெரீனா கடற்கரையில் கடந்த புதன்கிழமை காணாமல் போன சிறுமி தமன்னா கண்டுபிடிக்கப்பட்டார்.
சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் சையது நூர் அகமது. கடந்த புதன்கிழமை தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மெரீனாவுக்கு சென்றார். அப்போது விளையாடிக் கொண்டிருந்த சிறுமி தமன்னா திடீரென காணாமல் போனார்.
இதையடுத்து அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், அவரது பெற்றோர் டுவிட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்கள் மூலமும் மகளை தேடிவந்தனர். அத்துடன் ஓரிரு நாட்களுக்கு முன்னர் சென்னையில் பத்திரிகையாளர்களுக்கும் பேட்டி அளித்தனர்.
இந்நிலையில், தமன்னா கண்டுபிடிக்கப்பட்டார். இதையடுத்து அவரது பெற்றோரும் உறவினரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
3 comments:
நல்லது
"மெரீனாவில் காணாமல் போன சிறுமி தமன்னா கண்டுபிடிக்கப்பட்டார்"//
மகிழ்ச்சி.
மகிழ்ச்சி!
Post a Comment