நன்றி!!

தொடர்ந்து வந்து கட்டுரைகளைப் படித்து பின்னூட்டமிடும்- பின்னூட்டமிடாத அனைவருக்கும் நன்றி.

கடமை

நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்     

Saturday, April 30, 2011

பழைய சென்னையின் அடையாளம் நடராஜுக்கு மூடுவிழா!!

எத்தனையோ விஷயங்களில் கசப்பான நினைவுகள் இருந்தாலும், மனம் எப்போது நினைத்தாலும் இனிமையாகவே உணரும் ஒரு விஷயம் திரையரங்குகள்.


அதுவும் பள்ளி / கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்ட அல்லது வீட்டுக்குத் தெரியாமல் இரண்டாவது ஷோ பார்த்த திரையரங்குகளின் நினைவுகள், மனதுக்குப் பிடித்தவளின் முகத்தைக் கூட பின்னுக்குத் தள்ளி விடும். காரணம், கூத்து, நாடகம், சினிமா என பொழுதுபோக்குகளால் ஆக்கிரமிக்கப்பட்டவர்கள் தமிழர்கள்!

இத்தகைய சினிமா அரங்குகள் ஒவ்வொன்றும் மூடுவிழா காணும்போதும், மனம் சற்று கனத்துப் போவது உண்மை.

சென்னையில் ரஹேஜா டவராக மாறிவிட்ட எல்பின்ஸ்டோன், பின்னாளில் அலங்காராக அறியப்பட்டு இப்போது கமர்ஷியல் வளாகமாகிவிட்ட குளோப், பிளாஸா, பாரகன், கெயிட்டி, சன், சித்ரா, சயானி, கிரவுன், மினர்வா, முருகன், மேகலா, ஆனந்த், மினி ஆனந்த், சபையர், எமரால்ட், ப்ளூ டடமன்ட் காமதேனு, உமா, ராம், புவனேஸ்வரி, வசந்தி, ராக்ஸி, சரஸ்வதி, பத்மநாபா... இப்படி மூடு விழா கண்ட அரங்குகள் ஏராளம்.

பழைய சென்னைவாசிகளை அல்லது எழுபது எண்பதுகளில் இங்கே 55 காசுக்கும் 1 ரூபாய்க்கும் படம் பார்த்தவர்களைக் கேட்டால் கண்கள் மலர, அந்தக் கால இனிமை பேசுவார்கள்.

மூடுவிழா காணும் திரையரங்குகளில் வரிசையில் இப்போது புதிதாய் இடம்பிடித்துள்ளது நடராஜ். சென்னையின் மிகப் பழமையான தியேட்டர்களில் இதுவும் ஒன்று. சூளையில் திறக்கப்பட்ட முதல் தியேட்டர். 1964-ல் திறக்கப்பட்ட இந்த தியேட்டரில் திரையிடப்பட்ட முதல் படம் ஜெமினியின் வாழ்க்கைப் படகு.

பின்னர் அமரர் எம்ஜிஆரின் தாழம்பூ, நடிகர் திலகத்தின் அஞ்சல் பெட்டி 520 போன்ற படங்கள் வெளியாகின.

ஆனால் இந்திய சினிமாவின் மெகா ஹிட் படமான ஷோலே இங்கு திரையிடப்பட்டு வசூலை வாரிக் குவித்தது. தொடர்ந்து யாதோங்கி பாரத், ஹம்கிஸிஸே கம்நஹி கம்நஹி போன்ற சூப்பர் ஹிட் படங்கள் இங்கு வெளியாகி நல்ல வசூலைப் பெற்றன. இந்தப் பகுதியைச் சுற்றி வசிக்கும் வட மாநில மக்களின் விருப்பமான திரையரங்கமாக இருந்தது நடராஜ்.

கால மாற்றம், வசதிக் குறைவு, ரசிகர்கள் எதிர்ப்பார்ப்புக்கேற்ப நவீன வசதிகள் இல்லாமை போன்றவற்றால் நடராஜ் தள்ளாட ஆரம்பித்தது. இருந்தாலும் அவ்வப்போது எம்ஜிஆரின் பழைய படங்களை புத்தம் புதிய பிரிண்டாக்கி, ரசிகர்கள் ஆதரவோடு திரையிட்டு வந்தது நடராஜ்.

இந்த நிலையில் இத்திரையரங்கு திடீரென மூடப்பட்டு உள்ளது. தியேட்டரை இடித்து விட்டு வணிக வளாகம் கட்ட நிர்வாகம் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

சூளை பகுதியில் இருந்த பிரபலமான திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், நடராஜும் இப்போது தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டது, அந்தப் பகுதியில் வசிக்கும் பழைய காலத்து ரசிகர்களை சோகத்துக்குள்ளாக்கிவிட்டது.

ஆனால், மீண்டும் இங்கு வணிக வளாகம் எழும்பும்போது, மல்டிப்ளெக்ஸ் திரையரங்கம் இரண்டு திறக்கப்படும் என பங்குதாரர்களில் ஒரு தரப்பினர் கூறியுள்ளனர். சூளை ரசிகர்களுக்கு இது ஒரு ஆறுதல்!

"விஷ' மாம்பழத்தை கண்டறிய முடியுமா?


செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழங்களை பார்த்தவுடன் கண்டறிய முடியாது என்பதால், பொதுமக்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மதுரையில் சமீப காலமாக கால்சியம் கார்பைட் கற்களை பயன்படுத்தி செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இப்பழத்தை உண்போருக்கு வயிற்றோட்டம், பேதி, கேன்சர் போன்ற பாதிப்புகள் ஏற்படுத்துகின்றன. இயற்கையானவற்றை விட "மினுமினுப்பு' கூடி, நன்கு பழுத்த பழம்போல, மக்களை கவரும் இந்த மாம்பழங்கள் விஷமானவை. மாம்பழங்களின் தோலில் சுருக்கம் இருந்தால் அது இயற்கையான பழம் என வாடிக்கையாளர்கள் நினைக்கின்றனர். அது முழுவதும் சரியானதல்ல. இயற்கையான மாம்பழம் தோல் சுருக்கம் இல்லாமலும் உள்ளன. அதேபோல செயற்கையான மாம்பழங்களின் தோலில் கறுப்பு புள்ளிகள் இருக்கும் என கூறப்படுகிறது. அதுவும் தவறானதே. ஏனெனில் நோய் தாக்குதலாலோ, மாங்காய்களின் பால் படுவதாலோ கூட கறுப்பு புள்ளிகள் தோன்ற வாய்ப்புள்ளன. எனவே செயற்கையாக பழுத்த பழங்களை கண்டு பிடிப்பது கஷ்டமான காரியம்.

மாம்பழங்களின் பழுக்கும் தன்மை குறித்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் சி.முத்துத்துரை கூறியதாவது: கார்பைடு கற்களை வைத்து பழுக்க வைக்கும் மாம்பழங்களை கண்டு பிடிப்பது கடினமானது. அனுபவத்தின் மூலமே அறிய முடியும். பொதுவாக வெளித்தோற்றமே பழம்போல இருக்கும். உள்ளே பழுத்த தன்மையோ, சுவையோ, மணமோ இராது. எந்த ஒரு பழமும் விளைச்சல் (ஏச்ணூதிஞுண்tச்ஞடூஞு Mச்tதணூடிtதூ) என்ற நிலைக்கு வந்த பின்பே, அதில் சுக்ரோஸ் என்ற இனிப்பு தன்மை வரும். அதன் பின் புகைமூட்டம் போன்றவற்றால் பழுக்க வைப்பதால் பாதிப்பு வராது. ஆனால் காயாக இருக்கும்போதே, அதை ரசாயன கற்களை கொண்டு பழுக்க வைப்பதால் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மதுரை விவசாய கல்லூரி தோட்டக்கலைத் துறை தலைமை பேராசிரியர் மாரியப்பன் கூறியதாவது: செயற்கையாக பழுத்த மாம்பழங்களை வெளிப்புற தோற்றம் மூலம் கண்டு பிடிக்க முடியாது. அதிகளவில் பழங்களை வாங்குவோர், பழங்களில் ஒன்றை வெட்டிப் பார்த்து சுவைத்து பார்த்தே வாங்க வேண்டும். ஏனெனில் செயற்கையாக பழுத்த பழங்களில் இயற்கையான பழம்போன்ற சுவையோ, மணமோ இருப்பதில்லை, என்றார்.

பேராசை பெரும் நஷ்டம் :மதுரை மாவட்டத்தில் 6721 எக்டேர் நிலத்தில் மா விவசாயம் நடைபெறுகிறது. இதில் 26 ஆயிரத்து 884 மெட்ரிக் டன் மாம்பழம் கிடைக்கிறது. ஆண்டுதோறும் இந்த மாம்பழங்கள் மதுரை மார்க்கெட்டிற்கு வருகிறது. பெரும்பாலும் விவசாயிகளிடம் குத்தகைக்கு பெறும் விவசாயிகள், அவசர கதியில் மாங்காய்களை பறித்து, செயற்கையாக பழுக்க வைத்து விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.கடந்தாண்டு கார்பைடு மூலம் மாம்பழங்களை பழுக்க வைக்கின்றனர் என்பது மக்களிடையே பரவியதால் மாம்பழ விற்பனை படுத்து விட்டது. இந்தாண்டும் கார்பைடு பழ பீதியால் முறையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை வாங்க கூட மக்கள் அஞ்சுகின்றனர்.கார்பைடு மூலம் பழுக்க வைக்கும் முறையை முழுமையாக கை விட்டால் தான் மக்கள் மாம்பழத்தின் பக்கம் திரும்புவர்.

மதுரையில் கடந்த சில நாட்களாக "விஷ' மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். இதையடுத்து மதுரை பழக்கமிஷன் வணிகர்கள் சங்க நிர்வாகிகள் அறிவுச் செல்வம், முருகானந்தம் தலைமையில் நடந்த அவசர பொதுக்குழுவில் சில தீர்மானங்களை நிறைவேற்றினர். அனைத்து வியாபாரிகளும் கால்சியம் கார்பைடு கல்லை பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இனிவரும் நாட்களில் அவ்வாறு தவறு செய்பவரை அடையாளம் கண்டு சட்ட பூர்வ நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர். இனிவரும் நாட்களில் கல் வைக்காமல் பழுக்க வைத்த பழங்கள் விற்பனைக்கு தரப்படும். எனவே பொதுமக்கள் அச்சமின்றி பழங்களை வாங்கி பயன்படுத்தலாம். பழவியாபாரிகள் மீதான வழக்குகளை நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என தீர்மானம் நிறைவேற்றினர். 

Source: Dinamalar

தமிழில் பட்டாசு பற்றிய முதல் புத்தகம்

பட்டாசின் வேதியியலும் செய்முறை தத்துவங்களும்


பட்டாசு பற்றியும், பட்டாசு தயாரிப்பில் உபயோகிக்கப்படும் மருந்துப் (வேதிப்) பொருட்கள் (மூலப் பொருட்கள்) பற்றியும், பட்டாசு தயாரிப்பில் ஏற்படும் விபத்துக்களை தடுப்பதற்கான முன்னேற்பாடுகள் பற்றியும் தமிழில் எழுதப்பட்ட முதல் புத்தகம்.


இந்த புத்தகத்தை திரு. P.தனசேகரன். M.Sc., முன்னாள் வேதியில் துணைப் பேராசிரியர் (அய்ய நாடர் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி, - ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்தூர்) எழுதியிருக்கிறார். இவர் கல்லூரியிலிருந்து வியாபாரத்திற்கு 1976 ஆம் வருடம் வந்தார். பின்பு பேரியம் நைட்ரேட் (Barium Nitrate) தயாரிப்பிலும் பட்டாசிற்கான மூலப்பொருட்கள் பற்றிய ஆலோசனை கூறுவதிலும் அதற்கான 'பரிசோதனைக்கூடம்' (Laboratory) ஏற்படுத்தி நல்ல பணியில் ஈடுபட்டார். இதனால் இவருக்கு பட்டாசு தயாரிப்பில் ஈடுபடும் எல்லா தரப்பு மக்களுடனும் தொடர்பு ஏற்பட்டது. எனவே தனது முப்பத்தைந்து வருட அனுபவங்களை, பட்டாசு தயாரிப்பில் ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் நடவடிக்கையாக, அதில் ஈடுபடும் தொழிலாளர்களும் படிக்கும் படியாக எளிய அழகு தமிழில் எல்லோருக்கும் புரியும்படியாக எழுதியிருக்கிறார். இந்த புத்தகம் எல்லா கல்லூரிகளிலும், எல்லா பள்ளிகளிலும், எல்லா தொழிற்சாலைகளிலும், எல்லா பட்டாசு வியாபாரிகளிடமும், எல்லா பட்டாசு உபயோகிப்பாளர்களிடமும் (நாம் தான் - நமது குழந்தைகள் தான்) இருக்க வேண்டும். இந்த புத்தகத்தை எல்லோரும் படித்து பயன்பெறும்படி கேட்டுக் கொள்கிறேன். பக்கங்கள் 144. விலை ரூ.200/-- எனவே ரூ 200 மணி ஆர்டர் அல்லது ஸ்ரீவில்லிபுத்தூர் அல்லது ராஜபாளையத்தில் மாற்றத் தக்க செக் அல்லது டிராப்டு கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.

அனுப்ப வேண்டிய முகவரி:
Smt N.R.Uma Gandhi,
7-A, Koonangulam Devangar North Street,
SRIVILLIPUTTUR. 626 125 (Virudhunagar Dt).
Ph 04563 262 380 // 94434 27128
Email id: rathnavel_n@yahoo.co.in
rathnavel.natarajan@gmail.com

தங்களது பணம் கிடைத்த மூன்று நாட்களுக்குள் புத்தகம் கூரியரிலோ அல்லது ஸ்பீடு போஸ்ட் மூலமாகவோ அனுப்பப் படும். எங்களது முதல் நல்ல முயற்சிக்கு ஆதரவு கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

Friday, April 29, 2011

தூத்துக்குடியில் புத்தகக்கண்காட்சி

தூத்துக்குடியில் பல ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகக்கண்காட்சி நடைபெறுகிறது. தூத்துக்குடியில் புத்தகக்கண்காட்சி இன்று துவங்கி மே 8ந்தேதி வரை நடைபெறும். கண்காட்சி பாஸ்கர் கல்யாண மண்டபத்தில் (சார்லஸ் தியேட்டர் அருகில்) நடைபெறுகிறது.

என்னுடைய சாப்ட்வியூ நிறுவனத்தின் கடை எண்: 13. தூத்துக்குடி நண்பர்கள் என் கடைக்கு குடும்பத்தோடு விஜயம் செய்யவும். என்னுடைய கடையில் திரு.சாமிக்கண்ணன் (9840078699) என்ற ஊழியர் விளக்கம் அளிப்பார்.

--
M.Anto Peter
Softview
118. Nelson Manickam Road
Chennai -600029
Tel: +91-44-42113535

Wednesday, April 27, 2011

சிறுவனின் உயிர்காப்போம்!!!!!!


வணக்கம்.
தமிழ்நாடு, சேலம் நகரைச் சேர்ந்தவர் 43 வயது இளம்பெண் கவிஞர் சுமதி.
பி.காம் பட்டதாரி. கைப்பேசி குறுந்தகவல் (Mobile SMS) வாயிலாக கவிதைகளை நூற்றுக் கணக்கானோருக்கு அனுப்பி இலக்கியப்பணியாற்றும் படைப் பாளர்களை ஒருங்கிணைத்து, நான் அவர்களை இணையத் திற்கும் அழைத்து வரும் ஊக்ககுவிப்புப் பணியில் ஈடுபட்ட போது, இவர் எனக்கு அறிமுகமானவர். இணைய தளத்தில் என்னுடைய கவிதை வலைத்தளங்களிலும், வார்ப்பு. காம் கவிதைத்தளத்திலும் தனது படைப்புகளை வழங்கி புகழ் பெற்றுவரும் இவர் தன்னம்பிக்கையின் சிகரம்!


3 ஆண்டுகளுக்கு முன் கணவனை இழந்த இவர், தனது ஒரே வாரிசான 14 வயது மகனுக்கு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஏற்பட்டுள்ள “இரத்தப் புற்று” (Acute lymphoblastic leukemia - Blood cancer) நோயைக் குணப் படுத்தி அவனது உயிரைக் காப்பாற்றும் நோக்கத்துடன் தனது மறுமணத்தையும் புறக்கணித்துள்ளவர். 

வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பெரும் சோதனைகளை தன்னந்தனியே ஒரு பெண்ணாலும் எதிர்த்து நிற்கமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இவர், ஆசாரமுள்ள பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவராயினும், தான் ஒரு கைம் பெண் என்ற உணர்வே தன்னுள் வந்து, தனது மகனின் எதிர் கால வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது என்ற எண்ணத்துடன் வாழ்பவர்.

இவரது மகன் நீரஜ், தனது நோயின் தொடர் சிகிச்சை காரணமாக தனது பள்ளிப் படிப்பையும் தொடரமுடியாமல் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறான். “படிப்பில் ஆர்வமும், திறமை யும் கொண்ட மாணவன். இவனது நோய் விரைவில் குணமாக இரக்கமனமுள்ளவர்கள் பிரார்த்திப்போம், நம்மாலியன்ற உதவிகளைச் செய்வோம்.” என கூறுகிறது இவனது பள்ளி யில் கொடுக்கப்பட்டுள்ள சான்றிதழ். கடந்த மார்ச், 2010 லிருந்து இந்நோய்க்கு சிகிச்சை பெற்றுவரும் இச்சிறுவனுக்கு, தொடர் சிகிச்சை மேற்கொள்ள பொருளாதாரமின்றி வருந்தும் இந்த தாய், சென்னை அரசு பொது மருத்துவமனையில் அளிக்கும் புற்றுநோய்க்கான இலவச சிகிச்சையினை நம்பியிருக்கிறார். கடந்த ஓராண்டுக் காலம் மாதமொருமுறை சேலத்திலிருந்து சென்னை வந்து, சென்னை பொது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று திரும்பிய நிலையைத் தொடர்ந்து,  இப்போது கடந்த 23.3.2011 முதல் மருத்துவ மனையிலேயே (நாளொன்றுக்கு ரூ.600/- அறை வாடகை) தங்கியிருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சிறுவனுக்கு அவ்வப்போது இரத்தம் ஏற்றுவதற்கு இரத்ததான அன்பர்களும் உதவிவருகிறார்கள். இப்போது நடந்துவரும் Chemotheraphy சிகிச்சையைத் தொடர்ந்து, முழுநிவாரணம் பெற, உடலில் முழுவதும் புதிய இரத்தமாக மாற்ற, சில லட்ச ரூபாய்கள் செலவாகும் என்ற நிலையில் அந்த சிறுவனுக்கு உதவி தேவைப்படுகிறது. அவனது நோய் விரைவில் குணமடைய நம்மாலியன்ற பிரார்த்தனைகளைச் செய்வது மட்டுமின்றி, இயன்ற நிதியுதவிகளையும், இது போன்ற நோயாளிகளுக்கு உதவும் சமூகநல அமைப்புகளின் முகவரிகளையும் தந்து உதவவேண்டுமென்ற எதிர்பார்ப்புடன் ...... நமது குழுமத்தில் இச்செய்தியைப் பதிவிட்டுள்ளேன். (சிறுவன் நீரஜ்’ ஜின் கடந்தகால மருத்துவ அறிக்கைகளையும், பள்ளி தலைமையாசிரியரின் சான்றிதழையும் இத்துடன் உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளேன்)
நமது மனிதநேயம் ஓர் சிறுவனின் எதிர்கால வாழ்க்கையைக் காப்பாற்றட்டும்!

- கிரிஜா மணாளன் (girijamanaalanhumour@gmail.com)

More Photos

கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் - கே. ரகோத்தமன் சிபிஐ (ஓய்வு) பங்கேற்பு

* சிபிஐ எப்படி இயங்குகிறது?
* வழக்கு விசாரணை எப்படி நடைபெறுகிறது?
* ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக சிபிஐ நடத்திவரும் விசாரணைகள்.
* சமீபத்திய சாதிக் பாஷா கொலை வழக்கை சிபிஐ கையாண்ட விதம், சாதிக் பாஷா மரணத்தால் சிபிஐக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு.

மேற்கண்ட விஷயங்கள் குறித்து உரையாட ஓய்வுபெற்ற சிபிஐ அதிகாரியும் 'ராஜீவ் கொலை வழக்கு' புத்தகத்தின் ஆசிரியருமான கே. ரகோத்தமன் வரும் வெள்ளிக்கிழமை அன்று கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்துக்கு வருகை தருகிறார்.




மத்திய புலனாய்வுக் கழகம் இயங்கும் விதம் குறித்தும் முக்கிய வழக்குகள் பற்றிய விசாரணைகள் குறித்தும் அவர் உரையாடுவார். 

கலந்துரையாடலும் உண்டு.

அனைவரும் வருக!

தேதி : ஏப்ரல் 29, 2011 

நேரம் : மாலை 6.30

இடம் : கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை 18

Saturday, April 23, 2011

இன்று உலக உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம்!

ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ம் தேதி உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினமாகக் கொண்டாடப்படுகிறது. மக்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரித்தல், புதிய புத்தகங்கள் வெளியாக உதவுதல், பதிப்புரிமை பெறுதல் போன்ற செயல்களை ஊக்குவிக்க இந்த புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.

யுனெஸ்கோ அமைப்பு ஏப்ரல் 23-ம் தேதியை புத்தக தினமாக அறிவித்தது. ஷேக்ஸ்பியர், செர்வாண்டிஸ் போன்ற புகழ்பெற்ற இலக்கியவாதிகள் 1616, ஏப்ரல் 23-ம் தேதி மறைந்தனர். இலக்கியத்தில் நீங்கா இடம்பெற்றுள்ள இவர்களின் பங்களிப்பை போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ம் தேதியை உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினமாக யுனஸ்கோ அறிவித்தது.

அதன்படி கடந்த 1995-ம் ஆண்டு முதல் உலக புத்தக தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 100-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த தினத்தை கொண்டாடுகின்றன.

Friday, April 22, 2011

அக்ஷய த்ருதியை

க்ஷயம்என்றால் தேய்ந்து போதல் அல்லது குறைந்து போதல் என்று அர்த்தம்.அக்ஷயம்என்றால் அழிவின்றி வளர்வது, பூரணமானது, குறையாதது, அழியாத பலன் தரும் என்று பொருள்.



சித்திரை மாதம் அமாவாஸையை அடுத்துவரும் மூன்றாம் பிறை நாளான த்ரிதியை தினத்தில்தான்,கிருதயுகத்தை பிரமன் படைத்ததாகச் சொல்லுகிறது பவிஷ்ய புராணம். ஒரு யுகம் முடிந்து மறுயுகம் தொடங்கும் நாளை யுகாதிஎன்பர். அந்த வகையில் அக்ஷ்ய த்ரிதியை தினமும் காதிதான். மாலோடு’ ‘திருசேர்ந்து, மஹாவிஷ்ணு திருமால்ஆன தினம் என்பதால், திரிதியை திதி, பொதுவாகவே லக்ஷ்மி கடாட்சம் நிறைந்தது. எனவேதான் அன்று பொன்னும் பொருளும் வாங்கி சேர்த்தால் எந்தவிதக் குறையுமின்றி அந்த ஆண்டு முழுவதும் இல்லத்தில் செல்வம் கொழிக்கும் என்பது ஐதீகம். அட்சய த்ரிதியையன்று அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டு, பூஜை அறையில் கோலமிடுங்கள். மகாலக்ஷ்மி, மஹாவிஷ்ணு இருவரும் சேர்ந்தபடம் இருப்பின், விளக்கேற்றி பக்தியோடு பூஜை செய்து, தூப, தீபம் காட்டி, காய்ச்சிய பால், பழம் நிவேதனம் செய்து திருமாலை வழிபடுங்கள்.

இல்லத்தில் செய்யும் பூஜைத்தவிர அன்றையதினத்தில், நாம் வழங்கும் தானத்தால் புண்ணிய பலன்களை வளரச் செய்யலாம் என்கிறது புராணம். அதோடு, அன்றைய தினம் பித்ருக்களுக்காக தர்ப்பணம் அளித்தால் முன்னோர்களின் ஆசியைப் பெற்று, வறுமை நீங்கி வளம் பெறலாம். ஆயினும், பொன்னும் மணியும் வாங்கிக்குவிக்கக் குறியாயிராமல், த்ரிதியை நன்நாளில் நம்மிடம் இருப்பதிலிருந்து சிறிதேனும் வறியோர்க்கு தானமளித்தாலே லக்ஷ்மி நாராயணின் ஆசியையும் அவரது பரிபூரண அருளையும் அட்சயமாய் பெறலாம் என்பதில் ஐயமேதுமில்லை!
மகத்துவம் மிகுந்த அக்ஷ்ய த்ரிதியை நாளில் எந்த ஒரு செயலைத் துவங்கினாலும் பொன்னும்,வெள்ளியும், பொருளும் வாங்கினாலும் அவை மேன்மேலும் வளர்ந்து வளமை தரும் என்பது தொன்று தொட்டு நம்மிடையே இருந்து வரும் நம்பிக்கை. இந்த நம்பிக்கை வளர காரணமாயிருப்பது பல புராணங்களில் நிகழ்ந்துள்ள சம்பவங்களும், ஆச்சரியமூட்டும் நிகழ்வுகளும்தான். அவற்றில் சில……….

1. திருமகளின் எட்டு அவதாரங்களுள் ஐஸ்வர்ய லக்ஷ்மி மற்றும் தான்ய லக்ஷ்மி தோன்றியது இந்தத் திருநாளில்தான்.
2. இந்த புண்ணிய நாளில் தான் தசாவதாரங்களுள் ஒன்றான பரசுராம அவதாரம் நிகழ்ந்தது.
3. மஹோதயம் எனும் நகரில், வணிகன் ஒருவன் அட்சய த்ரிதியை தினத்தின் மகிமையைக் கேள்வியுற்று, அந்நாளில் கங்கையில் நீராடிவிட்டு, பித்ருத் தர்ப்பணம் செய்வதுடன், கோதானம், சுவர்ணதானம், பூமிதானம் போன்றவற்றைச் செய்து, மறுபிறவியில் குசாவதிநாட்டின் அரசனானதும் த்ரிதியை தினத்தின் மகத்துவத்தை உணர்த்தும் ஒருகதைதான். எனவே இந்த தினத்தில் விசிறி, குடை, சுவர்ணம் ஆகியவற்றை தானம் செய்வது அழியாப்பலனைத்தரும் என்பது விசேஷம்.
4. மஹாபாரதக்கதையில், கெளரவர் சபையிலே கெளரவம் பறிபோய் அவமானம் நேர்ந்துவிட்ட அச்சத்தில், அவலக்குரலில்அபயம்! அபயம்! என்று அலறினாள் திரெளபதி இருந்த இடத்திலிருந்தே அக்ஷ்யம்என்றார் கண்ணன். குறையாமல்வளர்ந்தது திரெளபதியின் சேலை.காக்கப்பட்டது பாஞ்சாலின் கற்பு, இது நிகழ்ந்ததும் ஒரு த்ரிதியை தினத்தில்தான்.
5. பாற்கடல் கடையப்பட்டபோது, அமுதத்தோடு அவதரித்த மலைமகள், ‘அகலுமில்லேன்என்று மாலவன் மார்பில் நிலையான இடம் பிடித்தது த்ரிதியை திதி நாளில்தான்.
6. மஹாலக்ஷ்மியின் பார்வை பட்டதால் பிறை நிலவாகப் பிறந்த சந்திரன், அட்சயமாகப் பெருகி வளர்ந்த முழுமதியாகப்பிரகாசித்தவன் ஒருசமயம், மதிகெட்ட செயலால், சாபம் பெற்று (க்ஷயரோகம்) அவன் உடல் தேய்ந்தபோது, அபயம் என்று இறைவனைத் தஞ்சமடைந்து, சாப விமோசனமாக அக்ஷயவரம் பெற்றதும் இந்த த்ரிதியை தினத்தன்றுதான்.
7. ஈஸ்வரன் பிட்சாடனர் திருக்கோலத்தில் வந்து காசியில் அன்னபூரணியான அம்பிகையிடம் பிட்சை பெற்ற பின்தங்கத்திலான அட்சய பாத்திரத்திலிருந்து ஸ்வர்ணகரண்டியால் உணவை கொடுத்து, அகிலாண்டநாயகி உலகுக்கு அன்னம் வழங்கத் தொடங்கியதும் இத்திருநாளில்தான்.
8. சகோதரன் ராவணனால் விரட்டப்பட்டு, வறுமையில் வாடிய குபேரன், ஈடற்ற தவத்தால், ஈஸ்வரனின் ஆக்ஞைப்படி, திருமகளை வழிபட்டு சங்கநிதி, பதுமநிதி என்ற ஐஸ்வர்ய கலசங்களைப் பெற்ற நாளும் அட்சய த்ரிதியை நாளன்றுதான்.
9. வனவாசத்தின்போது கடும் தவம் செய்த தர்மரின் முன்னால் காட்சி தந்த சூரியபகவான், ‘அன்னவளம் குன்றாதஅட்சயப்பாத்திரத்தை அவருக்கு அளித்ததும் இந்த நாளில்தான்.
10. ஏழ்மை என்பதற்கே எடுத்துக்காட்டாக இருந்த குசேலர், கண்ணன் கூறியஅக்ஷ்யம்என்ற சொல்லால் குபேரவாழ்வு பெற்றதும் த்ரிதியை தினம் ஒன்றில்தான்.
11. தமிழ் வருடங்களான அறுபது வருடங்கள். பிரபவஎனத் தொடங்கி, ‘அக்ஷயஎன்று நிறைவடையும். அக்ஷயவில் முடியக்காரணம் காலத்திற்கு முடிவில்லை; அக்ஷயமாய் அவை வளர்ந்து அடுத்த சுழற்சி ஆரம்பமாகும் என்று உணர்ததவே தான்.


இன்றைய நாளில் லக்ஷ்மி ஹோமம் செய்வது அல்லது பங்கேற்பது, லக்ஷ்மி பூஜை செய்வது அல்லது பங்கேற்பது மிகுந்த நன்மையைத் தரும். 


Source: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்

Monday, April 18, 2011

தோல்விக்கு பின்-கலைஞரின் கண்ணீர் கடிதம்!


    கொடி தோரணம் இல்லை. ஆரவாரம், பேரணி இல்லை. பொது கூட்டம், கல்வீச்சு, அடிதடி எதுவுமே இல்லை தமிழக தெருக்களின் வீட்டு சுவர்கள் சுத்தமாக இருக்கிறது. எருமை மாடு உரசுவதற்கும், பசுமாடு திண்பதற்கும் போஸ்டர்கள் கிடையாது. ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம் தேர்தல் முடிந்து விட்டதாம். நடந்ததும்  தெரியவில்லை, முடிந்ததும் தெரியவில்லை. ஒரு நீர்குமிழி விரிந்து பட்டென்று வெடிப்பது போல் எல்லாமே ஒய்ந்து விட்டது.

    பழையகால தேர்தல் என்றால் எத்தனை ஊர்வலங்களை பார்க்கலாம். உங்கள் வீட்டு பிள்ளை, கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருவார், ஏழைகளின்  சின்னம் என்றெல்லாம் எத்தனை ஒலிபெருக்கிகள் அலறி காதை கிழிக்கும். தெருவிளக்கில் மின்சாரம் திருடி கட் அவுட்டுகளை அலங்கரிப்பதாகட்டும், திண்ணை தூங்கிகளுக்கு சாராயம் வாங்கி கொடுத்து அலற வைப்பதாகட்டும், ‘டீ’ கடை பெஞ்சில் கால்மேல் கால் போட்டு அரசியல் கச்சேரி நடத்துவதாகட்டும், வீடு வீடாக தேடி வந்து காலில் விழுகிறேன் பேர்வழி என முரட்டு கையால் பாதங்களை சுரண்டுவதாகட்டும,; அதில் ஒரு அலாதியான போதை இருக்கத்தான் செய்தது, ஒரு மக்கள் அரசு என்பது மக்களுக்கு கொடுக்கும் அதிகபட்ச சந்தோசம் இது மட்டும் தான் என்றிருந்த நிலைமாறி அதுவும் இல்லாமல் போய்விட்டது.

    அரசாங்கமும் தேர்தல் கமிஷனும் மக்கள் சந்தோஷத்தை தின்று ஏப்பம் விட்டு விட்டதென்றால் நாமும் அப்படி செய்ய முடியுமா? தேர்தலை முடித்தோம்  ஓட்டுகளை எண்ணி பட்டாசு வெடித்து கொண்டாடியோ தலையில் துண்டு போட்டு ஒப்பாரி வைத்துவிட்டு அடுத்த வேலையை பார்ப்போம் என்றோ கூட போக முடியவில்லை. ஒரு நாள் கூத்தின் விடையை பார்க்க ஒரு மாதம் காத்திருக்க வேண்டுமாம். அது வரையிலும் தேர்தலில் நின்றவர்கள் குளிர் ஜுரத்தில் கிடந்து துடிப்பது ஒரு புறம் இருக்கட்டும். நமது திருவாளர் பொதுஜனம் யார் ஜெயிப்பர்? யார் ஆட்சி அமைப்பார்? எந்த கூட்டணி யார் பக்கம் அணி மாறும்? என்ற எதிர்பார்ப்பில் நெஞ்சி படபடக்க காத்திருப்பது தான் மகா பரிதாபம். எனவே நமது திருவாளர் பொதுஜனத்தின் ஆவலுக்கு தீனி போட தேர்தல் முடிவுகளுக்கு பின்னால் யார் தோற்றால் என்ன பேசுவார்கள் என்பதை சிறிது கற்பனை செய்து பார்ப்போம்.

     கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு தோல்வி என்பது புதிய விஷயமல்ல அவர் பல முறை தோற்று இருக்கிறார் எனவே இந்த முறை தோற்று விட்டால் கழக உடன் பிறப்புகளுக்கு எப்படி கடிதம் எழுதுவார்? அவரின் துள்ளிவரும் தமிழ் நமக்கு வராது என்றாலும் முயற்சி செய்து தான் பார்ப்போமே!

உடன் பிறப்பே!


  வான்புகழ் கொண்ட வள்ளுவனையும செம்மொழியில் சிலப்பதிகாரம் சமைத்த இளங்கோவையும் தந்த தாய் தமிழ்நாடு இன்று கண்டிருக்கும் அலங்கோலத்தை பார்த்தாயா? உடல் எங்கும் பாய்ந்தோடி கொண்டிருக்கும் பச்சை ரத்தம் நெஞ்சத்தை மட்டும் கிழித்து குபுகுபுவென பாய்வது போல, நீ துடித்திருப்பாய் அன்னை தமிழ்நாடு அமாவாசை இருளில் முழ்க போகிறதே என்று கலங்கி கண்ணீர் வடித்திருப்பாய்.

    தம்பி உன் மூத்த சகோதரனான நான் இளமை பிராயத்தை கடந்து முதுமையை தொட்டுவிட்டாலும், பாழ்பட்டு கிடக்கும் தாய் தமிழகத்தை வாழ வைத்து பார்க்கும் வற்றாத ஆசையில் சுற்றாத இடமில்லை. சூழன்று அடிக்கும் சூறாவளி போல என் தாய் நிலமெல்லாம் தம்பி உன் மலர்ந்த முகத்தை காண ஓடோடி வந்தேன். பல தாய் வயிற்றில் நாம் பிறந்தாலும் ஒரு தாய் மக்களென உன்னை நானும், என்னை நீயும் கண்ணார கண்டு நெஞ்சார தழுவி கொண்டோம். அந்த தழுவிலுள்ள பாசம் பணத்தால் வந்ததல்ல தமிழன் என்று இனத்தால் வந்தது என்று யாருக்கு தெரியும்?


    இந்த அண்ணனும் தம்பியும் சேர்ந்து விட்டால் அடிமையாக கிடக்கும் தமிழன் அடலேறு என சீறி எழுந்து விடுவான். தன்னை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆரிய மாயையின் நெஞ்சை பிளந்து விடுவான் என அஞ்சி நடுங்கிய தர்ப்பைபுல் கூட்டத்தார் சதி பேசினார்கள் தங்களுக்குள் உடைந்து கிடந்த பிணக்குகளை தற்காலிகமாக சமன் செய்து வானை மட்டுமே பார்த்து பழக்கப்பட்ட நாம் பள்ளத்தில் வீழ்வதற்கு குழி வெட்டினார்கள்.

    கிரேக்க வீதிகளில் சுற்றி திரிந்த ஒரு கிழவன் வருவோர் போவோரை எல்லாம் வாயார வரவேற்று உன்னையே நீ அறிவாய் என தத்துவம் பேசினானாம் அதே போல உடன்பிறப்பே உன்னையும் நீ அறிவாய், என்னையும் நீ மட்டுமே அறிவாய். கூழுக்கும், ஆடைக்கும் பாடிய பழந்தமிழ் புலவன் போல தமிழர் நலத்தை மட்டுமே அல்லும் பகலும் எண்ணி வாழ்ந்து வரும் என்னை குபேரபுரி சீமான் என்றும், கோட்டை கொத்தளத்தின் வாழும் கோடிஸ்வரன் என்றும் வசைமாரி பொழிந்தார்கள்.  தமிழருக்காக உழைத்தவன் என்ற ஒரே பாவத்திற்காக வஞ்சகமே அறியாத என் பிஞ்சு வாரிசுகளை புழுதிவாரி தூற்றினார்கள். சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாதரை போல் அத்தனை சாட்டை அடியையும் நானே வாங்கி கொண்டேன் நானே தாங்கி கொண்டேன்.



     எதற்காக அண்ணா உனக்கிந்த துயரம்? யாருக்காக அண்ணா நீ தாங்க வேண்டும் பாரம் என்று நீ கேட்பது உடன்பிறப்பே என் காதில் விழுகிறது தொல்காப்பிய சிறப்புகளை, குன்றென உயர்ந்து நிற்கும் குறழோவியத்தின் பேரெழிலை, நம் இனத்தாரின், வீர மரபை பறைசாற்றும் புறநானுற்று மாண்புகளை காதலனுக்கு கனிவாய் முத்தம் சிந்த காத்திருக்கும் காதல் பெண்களின் உள்ளத்து உணர்வுகளை வரிவரியாய் வர்ணிக்கும் அகநானூற்று சுவை உணர்வை காலமெல்லாம் எண்ணி எண்ணி ஏகாந்த வாழ்க்கை வாழ உடன்பிறப்பே எனக்கும் ஆசை தான் ஆனால் என் செய்வது?

        என் முன்னால் இமய வரம்பில் புலிக்கொடி நாட்டிய தமிழன், வடதிசை மன்னனை கல் சுமைக்க வைத்த தமிழன், முறத்தால் புலி விரட்டிய வீர மங்கைக்கு மகனாக பிறந்த தமிழன், கஞ்சிக்கும் வழியின்றி கட்டுவதற்கும் துணியின்றி ஏன் என்று கேட்பதற்கு நாதியின்றி பாழ்பட்டு கிடக்கிறானே?

        சிங்கார சீமான்கள், செவ்வாழை தோட்டத்தில் சீட்டாட்டமாடி களிந்திருக்க பாலில் கை கழுவினால் தான் உடல் வனப்பு குறையாதென குபேரபுரி மாந்தர் குதுகலம் கொண்டிருக்க வேளைக்கு ஒரு செருப்பும், மணிக்கு ஒரு ஆபரணமும், குளிக்கும் அறைகூட பொண்ணை உருக்கி மெழுகி வைத்த அம்மணிக்கு பெறாத பிள்ளைக்கு அரசு குமார்களின் திருமணம் போல் வாராணமாயிரம் சூழு மண ஊர்வலம் நடத்தி மகிழ்ச்சியில் கொக்கரிக்க.


     பெற்ற பெண்களை உயிரோடு  தர்மபுரியில் சிதை மூட்ட, ஜனநாயகத்தின் நான்காவது தூணாண பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட நீதி தேவதையின் செல்ல பிள்ளைகளான வழக்கறிஞர்கள் ஓடஓட விரட்டபட ஒரே நாள் இரவில் கள்வர்களைபோல அரசங்க ஊழியர்கள் சிறையில் அடைக்கப்பட இத்தனையும் தட்டி கேட்ட ஒரே குற்றத்திற்காக நானும் என் மருமகனும் நள்ளிரவில் பந்தாடப்பட திக்கெற்று கிடக்கிறானே திராவிடன் அவனை மீட்டு எடுக்க ஆவது செய்வோம் என்று செயல்படாமல் இருப்பதற்கு உன் அண்ணனின் இதயம் இரும்பால் செய்யப் பட்டது அல்ல உடன்பிறப்பே பஞ்சைவிட மென்மையானது உன் அண்ணனின் இதயம் .

    எனவே தான் வயதை மறந்தேன் உடலை அழுத்தும் ஆயிரம் நோயை மறந்தேன், தெற்கு தமிழன் வடக்கேயும் ஆள வேண்டும் என்று இரவோடு இரவாக ஆகாய விமானத்தில் பறந்தேன்.

செந்தமிழ் நாட்டு தமிழச்சி ஒருத்தி செங்குருதிப் பாயும் செறுக்களத்தில் ஊனையும் உதிரத்தையும் உயிரையும் கொடுத்து ஈன்ற தந்தையை இழந்தாளாம் அறுமை அண்ணனையும் பாசத்தப்பியையும் பறிகொடுத்தாளாம்



  இத்தனையும் இழந்தது போதாதென்று மங்கலநாண் தந்த மனாளனையும் மரண பூமிக்கு அனுப்பினாளாம் அத்தோடு விட்டாளா அந்ந ஆரணங்கு?

 எல்லையில் பகைவந்து யாரங்கே என கூக்குரலிட்டால் கொல்லையில் அத்தி மரமா நான் அசையாமல் நிற்பதற்கு? என்றெண்ணிய அத்தமிழச்சி நெஞ்சில் முட்டிய தீந்தமிழ்பால் கொடுத்து வளர்த்த பிஞ்சு மகனையும் வீர வாள் கொடுத்து போய்வா மகனே புல்லர் கூட்டத்தை பொடியாக்கு என போர்க்களம் நோக்கி திலகமிட்டு அனுப்பினாளாம்

நானும் அவளைப் போல மதுரைக்கு அடுத்துள்ள வறண்ட பூமியையெல்லாம் வளங்கொழிக்க செய்து வரும் அஞ்சா நெஞ்சன அழகிரிக்கு டெல்லிக்கு தன்மான தமிழனின் பெருமையை பறைசாற்றி விட்டு வா என வழி அனுப்பி வைத்தேன்.

மென்மை தமிழ் எடுத்து மேடையெல்லாம் முழுங்கி வந்த என் இலக்கிய வாரிசு கனிமொழியை வடக்கிலும் சென்று போர் பரணி பாடிவா என அனுப்பி வைத்தேன்.



  வீர தமிழனின் கைப்பிடித்த பெண் அடுப்படியில் மட்டும் கிடக்கமாட்டாள் அரசியலின் இன்னார்தான் அமைச்சராக வர வேண்மென அடையாளம் காட்டுவாள் என்று ஊரெல்லாம் அறிந்து கொள்ள என் இல்லற துணைவியை நீரா ராடியாவோடு பேச வைத்தேன்.

    என் அத்தனை செயலிலும் தமிழன் உயர வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் தமிழ் வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதை அறியாத ஆரிய கும்பல் என் மீது சேற்றை வாரி மட்டுமல்ல, தம்பி கொதிக்கும் தாரையும் எடுத்து பூசி விட்டார்கள்.

    நமது தமிழனுக்கு தங்கத்துக்கும் பித்தளைக்கும் வித்தியாசம் தெரியாது, கருங்கல்லுக்கும் வைரத்திற்கும் வேற்றுமை புரியாது ரத்தம் குடிக்கும் அரக்கர் கூட்டம் வந்து தொட்டிலாட்டி தாலாட்டு பாடினால் சுகமாக தூங்குவானே தவிர தன் உயிர் போய்விடுமே என கிஞ்சித்தும் கருதமாட்டான் அச்சத்திற்கும், அசட்டைக்கும் வித்தியாசம் தெரியாத அசடன் அவன் வர்ணஜால வார்த்தைகளை கொட்டி வாஞ்சையோடு பேசினாலே வாலாட்டி கொண்டு போகும் பிராணி அவன் தன்னை கழுத்தறுக்கும் கூட்டத்தையே ரட்சகர்கள் என நினைக்கும் அடிமை புத்தி அவன் ரத்தத்தில் ஓடுகிறது. அதனால் தான் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் வாழ்நாள் முழுவதும் போராடி சோற்றால் அடித்த பிண்டத்தை சொல்லால், செயலால் ஆரியத்திடமிருந்து காப்பாற்ற முடியாது என கண்ணீரோடு சொன்னார்கள்.


     உண்ண அரிசி கொடுத்தோம், கறிகாய் வாங்க வேலை கொடுத்தோம், ஓய்வு பொழுதில் அறிவை வளர்க்க வண்ண தொலைக்காட்சி கொடுத்தோம் மானம் மறைக்க ஆடை, மழைக்கு ஒதுங்க கல்வீடு, உழைத்து  பிழைக்க இலவச நிலம் என்று ஏராள நலத்திட்டங்களை செய்து முடித்தோம் அத்தனையும் பெற்று கொண்ட மறத்தமிழன் நன்றி மறந்து மானம், இழந்து மதியும் இழந்து நமக்கு தர வேண்டிய அறுச்சுவை உணவில் சாணத்தை கலந்து விட்டான். மன்னிப்போம் தமிழனை காத்திருப்போம் காலம் வரும்.

இப்படிக்கு மு.க      


     தோற்று போனால் கலைஞரின் கடிதம் ஏறக்குறைய இப்படிதான் இருக்கும். ஒரு வேளை ஜெயலிலதா தோற்று போனால்? அவர் என்ன செய்வார்? கடிதம் எழுதுவாரா? கண்ணீர் சிந்துவாரா? இரண்டுமே இல்லை பெங்களுருக்கோ கொடநாடு எஸ்டேட்டிற்கோ சென்று ஒளிந்து கொள்வார் பிறகு நமக்கெப்படி சுவாரஸ்யமான கற்பனை வரும்? உண்மையில் அ.தி.மு.க அடலேறுகள் பாவப்பட்ட ஜென்மங்கள் அவர்கள் தலைவியால் அவர்களுக்கும் சுகமில்லை மக்களுக்கும் சுவாரஸ்யமில்லை.


Source: Ujiladevi 

Thursday, April 14, 2011

தேர்தல் வெற்றிக் கூட்டணி அறிவிப்பு!!! - ரோமிங் ராமன்

  இந்தக் கட்டுரை ஆசிரியர் சதா பைக்கில் சுற்றிக்கொண்டிருப்பதால் "ரோமிங்" ராமன்.நிறைய  தளங்களில் பின்னூட்டங்கள்  எழுதுபவர். தேசபக்தி மிகுந்தவர்.  நாட்டைப் பற்றி  நிறைய அக்கறை உடையவர்.- இவர் நமக்கு அனுப்பியுள்ள கட்டுரை!!   

            "இரண்டாயிரத்துப் பத்தாம் ஆண்டு  நடந்த நிகழ்வுகள் 
            எங்களை  உலுக்கி விட்டன .  இந்த நாட்டின் தலைவர்களை
            விட எங்களுக்கு தேச பக்தி அதிகமாக உள்ளது. இந்த தேசத்தின்
            எதிர் காலம் நன்றாக இருக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும் ?" 

        ஈரோட்டைச் சேர்ந்த ராஜா கதிரவன் என்ற வாசகர், துக்ளக்கின்

        41 ம்  ஆண்டு விழாவில் முதல் கேள்வியாகக் கேட்டதற்கு, ஆசிரியர்  
       அவர்கள்,
   
         " பொறுப்பானவர்கள் பெரும்பாலும் வாக்களிப்பதில்லை! 
                        அவர்கள் வாக்களித்தாலே நாட்டிற்கு நன்மைகள் நடக்கத்
தொடங்கி விடும்"  என்று  பதிலளித்தார்! 
        
          இந்தத் தேர்தலில் அலறும (பெரிய) பிரச்சாரங்கள் இல்லை!! வீதிக்கு வீதி கட-அவுட்டுகள்,தோரணங்கள்  இல்லை!! பொய்களைப் பரப்ப பிளக்ஸ் பேனர்கள் இல்லை!! சுவர் விளம்பரங்கள்  இல்லை. தமிழ் நாட்டுக்கு அவப்பெயரைத் தேடித்தந்த "திருமங்கலம் பார்முலா" வை பெரிய அளவில்  செயல் படுத்த முடியவில்லை. பெரிய அளவில் மோதல்களும், கள்ள வோட்டும் இல்லை!!


           
  (ஆட்சி அமைக்கும் அரசும் இந்த கட்-அவுட்,பேனர்,தோரணம் எல்லாம் முதலிலேயே தவிர்த்தால், ஆரம்பத்திலிருந்தே நல்ல பெயர் சம்பாதிக்கலாம்!)

          திருமங்கலம் பார்முலா வை முறியடிக்க, தேர்தல் கமிஷன் பட்ட பாடு சாதாரணமானதல்ல.-இரவில் மின்வெட்டு கூடாது என்று கூட ஒரு ஆணை   பிறப்பிக்கப் பட்டது!!! தேர்தல் கமிஷனின் உறுதியான நடவடிக்கைகளால் 34 கோடி ரூபாய் பணமும  13 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களும் கைப் பற்றப்பட்டு,  5.18 கோடி ரூபாய் மட்டும் சரியான  ஆவணங்களைக் காட்டி திரும்பப் பெறப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷனும், அதன் அதிகாரிகளும் மக்களின் நம்பிக்கையையும், நன்-மதிப்பையும் பெற்றுள்ளனர். ஆனால்,தேர்தல் கமிஷனின் (நியாயமான ) கடும்  நடவடிக்கைகள் கலைஞரை, "நான் முதல்வராக இருக்கிறேனா இல்லையா" என்றே தெரியவில்லை என்று புலம்ப வைத்து விட்டது. ஸ்டாலினும் தன் பங்குக்கு தேர்தல் கமிஷனை முடிந்தவரை சாடினார். ப சிதம்பரம் ஒரு படி மேலே போய், தேர்தல்  என்பது திருமண வீடு போல இல்லாமல், வேறு வீடு  மாதிரி ஆகிவிட்டது என்று அழுதார். திமுக கூட்டணி தவிர்த்து வேறு யாரும் தேர்தல் கமிஷனை குறை சொல்லவில்லை.
(உட்பொருள்: எங்களுக்கு நீதியும் நேர்மையும் ஒருநாளும் பிடிக்காது - எதுவும் எங்கள் சர்வாதிகார வரம்புக்குள் வரக்கூடாது!)    

         இந்தத் தேர்தலில்  கிட்டத்தட்ட எண்பது சதவீத வாக்குப் பதிவு (சென்ற தேர்தலில் 70.82 சதவீதம்) நடந்திருக்கிறது. மத்திய போலீசின் பாதுகாப்பு,தேர்தல் கமிஷனின் கண்டிப்பான நடவடிக்கைகள் ஆகியன பிரதானமாக சொல்லப் பட்டாலும்,  மக்கள் நல்ல விழிப்புணர்ச்சியோடும் பொறுப்போடும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக்  கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் சரி. பொதுவாக, விமர்சனம் மட்டும் செய்துகொண்டு வாக்களிக்காத அறிவு ஜீவிகளும் வாக்களித்துள்ளனர் என்று தோன்றுகிறது.      இன்னும் சொல்லப் போனால், paper ballot வந்தால் இன்னும் கூட இவர்கள் நம்பிக்கை அதிகமாகி, இவர்கள் அதிகமாக வெளியில் வரக்கூடும்.  பொதுவாக வாக்குப் பதிவு சதவீதம்  அதிகமானால்,  ஆட்சி மாற்றம் வரும் என்று கூறுவார்கள். அனால் இந்தக் கூற்று பலமுறை பொய்த்தும் இருக்கிறது. ஆனால் நான் அறிந்தவரை, மக்கள் ஆட்சியை  மாற்றத் தயாராகி விட்டார்கள். பல்வேறு கருத்துக் கணிப்புகளை விடவும் கூடுதலான இடங்கள்  அதிமுக கூட்டணி  பெறும் என்று எம் பல்வேறு ஊடக நண்பர்கள் சொல்கிறார்கள்..
         
          இந்த முறை  தமிழகத்தில் மக்கள் தைரியமாக  வந்து, பெரிய வரிசையில் பொறுமையாக நின்று வாக்களித்திருக்கிறார்கள். நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் வந்து வாக்களித்து விட்டு பெருமையாக விரல் உயர்த்திக் காண்பித்ததே போதாதா?

          பீகாரைத் தொடர்ந்து, மிகச்சிறப்பாக தமிழ்நாட்டில் தேர்தல் நடத்திக் காட்டியிருக்கும் தேர்தல் கமிஷன் பாராட்டுக்குரியது.இதே நேர்மையும், கண்டிப்பும் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை இருக்க வேண்டும்.
   
  வெற்றிக் கூட்டணி : " தேர்தல் கமிஷன் & வாக்களித்த மக்கள் "

                                  

அனைவருக்கும் எமது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


Monday, April 11, 2011

வைகோவுக்கு ஒரு மனம் திறந்த மடல்

நமது வாசகர் திரு.அமுதப்ரியன் அவர்கள் வைகோவிற்கு எழுதியுள்ள கடிதம்.

கடந்த 15 வருடங்களாக நான் திரு.வைகோ அவர்களை கவனித்து வருகிறேன். 


கொண்ட கொள்கையில் உறுதியான நேர்மையும், சிம்ம குரலாக தனது குரலை எடுத்து வைக்கும் திறமும், யாருக்கும் அஞ்சாத வீரமும் கொண்டவர். அதிமுகவுக்காக கடந்த 5 வருடங்களாக கிட்டத்தட்ட கொ.ப.செவாகவே ஆகிப்போனது மதிமுக. யார்க்கும் யாரும் சளைத்தவரில்லை என்ற போக்கு உடைய திமுக அதிமுக தலைமையிடம் ஏமாந்து போனார் வைகோ. அவருடைய ஆளுமைத்திறமும், தமிழும் இங்கு தமிழ்நாட்டில் யாரும் அவருக்கு நிகரில்லை எனலாம். 

தற்போதைய சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீட்டில் மதிமுகவை நடத்திய விதம் அனைவருக்குமே மனசஞ்சலத்தை ஏற்படுத்தியது எனலாம். அந்தளவுக்கு கீழ்த்தரமாக நடத்தப்பட்டனர். அடுத்த வரும் தேர்தல்களில் நிச்சயம் மதிமுக மிகப்பெரும் சக்தியாக உருவெடுக்கும் என நான் நினைத்திருந்தேன். ஆனால் தற்போது நடந்து வரும் சூழல் என்னைப் போன்ற நடுநிலையாளர்களின் கருத்துகளுக்கு சம்மட்டி அடிப்பது போல இருக்கிறது. முதலில் வைகோ அவர்கள் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்திருந்தார். அவரது முடிவு சரியானதுதான் என அப்போதைய சூழல் எடுத்துரைத்தது. அனைத்து தமிழ் மக்களுக்கும் வைகோவின் தைரியத்தின் மேல் மரியாதை பிறந்தது. இந்த தைரியம் தமிழ்நாட்டில் இருக்கும் மற்ற கட்சியினருக்கு உண்டா என்பது தெரியவில்லை. இப்போது சில இடங்களில் வைகோவின் கட்சியினர் சிலர் சிற்சில இடங்களில் சோரம் போக துவங்கியுள்ளனர். இது வைகோ அவர்களுக்கு அவமானத்தை ஏற்படுத்த ஆளுங்கட்சியினர் செய்யும் செயலாகவே பார்க்கப்படுகிறது. மேலும் மதிமுகவின் கொள்கைப்பரப்புசெயலாளர் திரு.நாஞ்சில் சம்பத் அவர்கள் தலைமையில் சிற்சில இடங்களில் பட்டிமன்றங்கள் நடைபெற்று வருகின்றது. அந்த பட்டிமன்றங்களில் அதிமுகவை சாடி கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன. 


இதுவும் அவர்களுக்கான உரிமைதான். ஆனால் காங்கிரஸுக்கு ஆதரவாக சில இடங்களில் மதிமுக தொண்டர்கள் சிலர் வேலை செய்யத் துவங்கியுள்ளதுதான் என்னைப் போன்ற தமிழ் தேசிய உணர்வாளர்களுக்கு மனசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் தேசியம் என்பதுதான் மதிமுகவின் தலையாய கொள்கை என்பது அனைவருக்கும் தெரியும். அதிமுகவை பழி வாங்க ஈழத்தில் நடந்த வன்கொடுமைகளுக்கு காரணமான காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவிப்பதும், ”கை” கட்டி வாய் மூடி மௌனியாக இருந்த திமுக கூட்டணி கட்சிகளுக்கும் ஆதரவு தெரிவிப்பது எந்த விதத்தில் நியாயம் என்பது தெரியவில்லை. 
 
மேலும் 

விண்ணை முட்டும் விலைவாசி கடும் உயர்வு,
சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு,
ஊழலில் கின்னஸ் சாதனையான 2G,
கனவாகி போன 2 ஏக்கர் நிலம்,
மணல் திருட்டு,
அரிசி திருட்டு,
நதிநீர் பிரச்சனைகளில் முடிவெடுக்க தைரியம் இல்லாமை,
ரவுடிகளின் ராஜ்ஜியம்,
தா.கிருட்டிணன் (தற்)கொலை செய்து கொண்டது,
மூன்று பத்திரிகையாளர் சகோதரர்கள் தங்களை தாங்களே மாய்த்து கொண்டது,
சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறையினர் வழக்கறிஞர்கள் மீதும், நீதிபதிகள் மீதும் நடத்திய சர்க்கஸ் விளையாட்டு,
தன் குடும்ப போற்றுதலுக்காக செம்மொழி மாநாடு நடத்தியது,
மாநாட்டுக்கு வராமல் போனவர்கள் ஒரு தகப்பனுக்கு பிறக்கவில்லை என ஆசிர்வாதம் செய்தது,
ஈழப்பிரச்சனைகளை நீர்த்து போக செய்தது,
ஈழத்தில் நமது உறவுகள் மாய்ந்து கொண்டிருக்கும் போது அமைச்சரவை பங்கீட்டில் அனாயசமாக ஈடுபட்டது,

போன்ற என்னற்ற சாதனைகளால் திக்குமுக்காடி போயிருக்கும் தமிழக மக்களுக்கு ஆதரவாக இருக்கும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கும் உங்கள் கட்சி தொண்டர்களுக்கு நீங்கள் தெரிவிக்கப் போவது என்ன?

இதெல்லாம் போகட்டும்.

ஈழத்தில் நடந்த கொடூரங்களை மனிதனாக பிறந்த யாராலும் மறக்கவும், மறுக்கவும் முடியுமா?

ராஜபக்‌ஷேவே இந்தியா தான் எங்களுக்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்தது என்று அறிவித்ததையும், அந்த காங்கிரஸை உங்கள் தொண்டர்கள் ஆதரிப்பது முறைதானா? சரிதானா?

நீங்கள் ஊழலுக்கு எதிரானவர் என்பது அனைவருக்குமே தெரியும். கடந்த சில நாட்களுக்கு முன் அன்னா ஹஸாரே என்றொரு கல்கி அவதாரம் உண்ணாவிரதம் இருந்தாரே, அதற்காவது உங்கள் ஆதரவை தெரிவித்தீர்களா?(அது சரி உங்களை சொல்லியும் குற்றமில்லை. மாப்பிள்ளை படத்திற்கு க்யுவில் நின்று டிக்கெட் வாங்கி பார்த்தும், ஐபிஎல் போட்டிக்கு க்யுவில் நின்று பார்த்தும் நேரம் செலவழிக்கும் மக்கள்தானே நாங்கள்)

இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. நாங்கள் காங்கிரஸுக்கு வாக்களிக்கலாமா? வேண்டாமா? என நீங்கள் சொன்னால் போதும். இன்னும் 24 மணி நேரங்கள் இருக்கின்றன.

இனி முடிவு உங்கள் கையில்....

அமுதபிரியன்.

Sunday, April 10, 2011

"பிற(ர்)" சாரம்


இந்தத் தேர்தல் குறித்து நமக்கு வாசகி  சந்திரா ராபர்ட் அனுப்பியுள்ள கட்டுரை!! இவர் ஒய்வு பெற்ற பேராசிரியை  (எந்தத் தொகுதி/ பகுதி  என்று கேட்டு மெயில் அனுப்பி இதுவரை பதிலில்லை!!)

"பிற(ர்)" சாரம்

 தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து உச்சக் கட்டத்தைத் தாண்டி இறுதி கட்டத்தை அடைந்தும் விட்டது. வழக்கமான பிரச்சாரங்களை விட கூடுதலாக பிறர் பற்றிப் பேசிய சாரம்தான் அதிகம்!!

     தி மு க இந்தத் தேர்தலில் காமெடிக்கு பெரிய முக்கியத்துவம் கொடுத்து விட்டது.ஆரம்ப கட்டங்களில் தனது சாதனைகளாக ஒரு ரூபாய் அரிசி,இலவச டிவி, இலவச 108 ஆம்புலன்சு, கலைஞர் காப்பீட்டுத் திட்டம்  என்று தொடங்கிய தி மு க , எதிரணியின் கேள்விகளுக்கு நேரடியாக பதில்கள் இல்லாததாலோ என்னவோ, வடிவேலுவை வைத்து  அவரது கவர்ச்சியை நம்பி, முன்னிலைப் படுத்தி இறங்கியது!! 

      அவரும் ஒருவேளை நாளை வேறு ஆட்சி அமைந்து விட்டால் காப்பாற்றிக்கொள்ள வசதியாக இருக்கட்டும் என்று, தன்னை அழகிரியும் ஸ்டாலினும் தான் அழைத்து வந்துள்ளதாக ஒரு வாக்குமூலம் கொடுத்து விட்டு தொடங்கினார். ஆனால் வடிவலுவை வைத்துக்கொண்டு தி மு க முழுக்க முழுக்க விஜயகாந்த்தை தாக்கவே திட்டம் வகுத்துக்கொடுத்தாகத் தெரிகிறது. அத்தனையும் தனிமனித விமர்சனம் மட்டுமே ... ஆனால் படு கேவலமாக இருந்தது. கூடவே கலைஞர் டிவியும், சன் டிவியும் முடிந்த மட்டும் விஜயகாந்த்தின் பேச்சுக்களை டப்பிங், எடிட்டிங் எல்லாம் செய்து எதிரணியின் சானல்களை விட அதிகமாக அவர்களைக் காட்டி விளம்பரம் கொடுத்ததன!!  இந்த விஷயத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது வடிவேலுவின் பிரச்சாரத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தி ஏனைய கூட்டணி கட்சியினரை எரிச்சலிலும், ஆத்திரத்திலும் ஆழ்த்தியுள்ளதாக செய்திகள் வருகின்றன.

       தி மு க மீது சாட்டப்படும் குற்றச் சாட்டுகளான விலைவாசி கட்டுப்பாடின்மை,குடும்ப ஆதிக்கம், மின் வெட்டு , கட்டுப்பாடில்லாத அன்றாட வன்முறை,ஸ்பெக்ட்ரம் ஊழல் .... போன்ற எதற்குமே நேரடியான விளக்கங்கள் இடம் பெறாதது ஏமாற்றமே!!  பெரும்பாலான அமைச்சர்களையும் , தி மு க முக்கியப் புள்ளிகளைகளையும்  பிரசாரங்களில் காண முடியவில்லை. வடிவேலுவை பிரதானப் படுத்தி ஒரு "லைவ் காமெடி ஷோ " மட்டுமே நடத்த முடிந்தது! உச்ச பட்ச காமெடி முதல்வர் அதி முக்கிய  தேர்தல் பிரசாரத்தில், பொன்னர் சங்கரைத் தொடர்ந்து தீரன் சின்னமலை படத்தில் பணியாற்றுவேன் என்றது!! இது என்ன மக்கள் நலத்திட்டமோ தெரியவில்லை!  மற்ற கட்சிகள் தேர்தல் கமிஷன் நடவடிக்கைகளை வரவேற்கும் போது ஏனோ கலைஞர்  மட்டும் தேர்தல் கமிஷனையும் பாவம்  ஒரு எதிர்க் கட்சியாக நினைத்து கடும் விமர்சனங்களை  அள்ளி விடுகிறார்.
        அதைவிட, கூட்டணிக் கட்சிகள் பற்றியோ அவர்களின் பிரச்சாரம் பற்றியோ கூட அவர்கள் பெரிதாக முக்கியத்துவம் தரவே இல்லை. தங்கள் தொலைக் காட்சிகளில் கூட!! "ஆறாவது முறை " கலைஞர் முதல்வராக வேண்டும் என்பது மட்டுமே focus செய்யப் பட்டது தவிர்த்து பிரகாசமான எதிர்காலத் திட்டங்கள் பற்றி விவரங்கள் இல்லை. அதனால் முழுக்க முழுக்க எதிர்க் கட்சி கூட்டணி பற்றிய தனி மனித தாக்குதல்கள், விமர்சனங்கள் தவிர பெரிதாக எதுவும் இல்லாதது சோபிக்கவில்லை!!
       
       அ தி மு க அணியும் எதிர்க் கூட்டணியை விமர்சிப்பதில் குறை ஒன்றும் வைக்கவில்லை.  வடிவேலுவுக்கு எதிராக சிங்க முத்துவை களம் இறக்கி வேடிக்கை காண்பித்தனர். ஆனால் இவர்களிடம் தி மு க வின் கேள்விகளுக்கு சரியான கவுன்ட்டர் இருந்தது. கூட்டணிக் கட்சிகளுடன் மிக நல்ல இணக்கமான போக்கினைக் காண்பித்தது, ஜெ வின் (கடந்த கால ??) அனுபவ முதிர்ச்சியைக் காண்பித்தது. மேலும் சொந்த சானல் இல்லாத கூட்டணிக் கட்சியினரையும்(தா பாண்டியன், ஜி ராமகிருஷ்ணன்,கிரிஷ்ணசாமி,சரத்குமார், ஜபருல்லா, சேதுராமன் போல )  நன்றாக கவர் செய்தது! கேப்டன் பிரச்சாரத்துக்கும் தேவையான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது!!  ஜெ டிவியோ சரியாகத் திட்டமிட்டு செயல் பட்டது என்றே தோன்றுகிறது. கடைசிக் கட்டத்தில், முன்னாள் கூட்டணியினரின் (திருமா, ராமதாஸ், வடிவேலு) பழைய பேச்சுக்களையும், இன்றைய பேச்சுக்களையும் சரியாகத் தொடுத்து "அன்றும் இன்றும்" என்று காட்டுவது புத்திசாலித்தனம். ஜெ வின் பிரச்சாரத்திலும் எதிரணி பற்றிய காட்டமான விமர்சனமே பிரதானமாக இருந்தது. ஆனாலும் எல்லை மீறவில்லை!!  மேலும் புத்திசாலித்தனமாக, கடைசி கட்டத்தில் தன்னுடைய ஆட்சியின் கடந்த கால சாதனைகளை பட்டியலிட்டது மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஜெ வின் பேச்சில் இந்தத் தேர்தல் பிரசாரத்தின் போது, தமிழ் நாட்டைத் தாண்டியும் தேச நலன் பற்றிப்  பேசிய தொலைநோக்குப் பார்வை குறிப்பிடத்தக்கது. அ தி மு க கூட்டணி இந்தப்  பக்கம்  எதிர்க் கட்சிகளின் ஊழல், கறுப்புப் பணம், என்று கத்திக்கொண்டிருக்கையில், அன்னா ஹசாரே ஒரு பக்கம் உண்ணாவிரதம் இருந்தது கூடுதல் பலம் சேர்க்குமோ என்னவோ ?? தேர்தல் கமிஷன் விஷயத்தில் கூட ஜெ சரியான அணுகுமுறையைக் கையாள்கிறார் என்றுதான் தோன்றுகிறது. 

        இந்தத் தேர்தலில் தேர்தல் கமிஷனால் பிடிக்கப் பட்டிருப்பது மட்டுமே கிட்டத்தட்ட நாற்பது கோடிக்கு வந்து விட்டது. பிடிபடாதது எவ்வளவோ?? ஆக நம்மூரில் பணம் நிறைய இருக்கிறது என்பதும் நிரூபணம் ஆகி இருக்கிறது.

       எத்தனை பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை,, கலைஞர் தேர்தல் கமிஷன் மீது கொண்டிருக்கும் கோபம், பத்திரிகைகளின் கருத்துக் கணிப்புகளுக்குப் பின் மேலும் கூடியிருக்கிறது. 

இன்னொரு விஷயம், கணிப்புகளுக்குப் பின் ஜெ முகத்தில் பூரிப்பும் கலைஞர் முகத்தில் கவலையும் நன்றாகத் தெரிகிறது!! 

 குழம்பிய குட்டை


 தெளிந்த நீரோடை


           எப்படி இருந்தாலும் இந்தத் தேர்தலில் தன சாரத்தைப் பேசியதை விட எதிர்க் கட்சிகளின் பிற சாரத்தைப் பற்றி தான் அதிகம்!!

- சந்திரா ராபர்ட்.

Friday, April 1, 2011

பல்லாண்டுத் தலைமை என்பது பெருமைக்குரியதா??


நம் நாட்டில் உள்ள நல்ல கல்லூரிகளில் வெளிநாட்டினர் வந்து தங்கிப் படிப்பதை நிறையப் பார்க்கிறோம். வெளி நாட்டினர் மருத்துவத் தேவைகளுக்காகவும்-பெரும்பாலும் குறைந்த செலவு என்பதால்-நம் நாட்டிற்கு வருகிறார்கள். ஆனால் நம் நாட்டில் உள்ளோர் மட்டும் வேலை தேடி ஏன் அயல் நாடுகளுக்கு சென்று விடுகிறார்கள்?? அவர்களுக்கு குடும்பம், குழந்தைகள் மனைவி,தாய்,தகப்பனை விட்டுப் பிரிந்திருக்க வேண்டும் என்று  ஆசையா? பணம் சம்பாதிக்க வேண்டித்தானே எல்லாரும் கடல் கடந்து ஓடுகிறார்கள். உடனே இன்ஜநீரிங் படித்தவர்கள் மட்டும் என்று கற்பனை செய்யாதீர்கள்.. நமக்குத் தெரிந்த அளவிலேயே, கேரளாவிலிருந்தும், நம் தென் தமிழ் நாட்டிலிருந்தும் டிரைவர், கொத்தனார்,கார்ப்பென்ட்டர்  என்று எல்லாத் துறைகளுக்கும் அரபு நாடுகளில் முயற்சிக்கவில்லையா என்ன? படித்தவர்கள் மட்டுமன்றி எல்லாரும்தான் வேலை தேடி வெளிநாடு செல்கிறார்கள். கவனிக்க வெளி நாட்டினர் இங்கு படிக்க வருகிறார்கள், சுற்றுலா வருகிறார்கள்.. வேலை தேடி ஏன் வருவதில்லை??
குல்சாரிலால்  நந்தா
அதாவது அறிவினால் ஆகட்டும் அல்லது உழைப்பினால் ஆகட்டும் நம் நாட்டை விட அயல் நாடுகளில் அதிகம் சம்பாதிக்க முடிகிறது என்பது  உண்மை. அப்படியானால், கிட்டத்தட்ட 120 கோடி மூளை உள்ள இந்த நாட்டில், நல்ல கல்வி கிடைக்கும், உழைப்பு கிடைக்கும் ஆனால் அதற்கேற்ற ஊதியம் கிடைக்காது.. இந்த நாட்டிலிருந்து நல்ல மூளைகளையும் நல்ல உழைப்பையும் நாடு கடத்துகிறோம். இன்னொரு கொள்ளை கும்பல்  கொள்ளை அடித்த கறுப்புப் பணத்தை நாடு கடத்தி ஒளித்து வைத்துக் கொண்டிருக்கிறது.
 நம் 63 ஆண்டு சுதந்திர இந்தியாவில் அதிக காலம் தலைமை ஏற்று ஆட்சி செய்திருப்பது காங்கிரஸ் கட்சி தான்.இது பெருமைக்குரிய விஷயமா?கூட்டணிகள் கதை இன்னும் காமெடி!!  கிரிக்கெட்டில் உலகம் மெச்சும் சச்சின் இன்று தலைமையிலா இருக்கிறார்? ஆனாலும் நம் தேசத்துக்கே பெருமை சேர்க்கும் ஒரு ஆட்டக்காரர். இப்படி அல்லவா கூட்டணி என்பது இருக்க வேண்டும்.(மென்பொருள் துறை போல கிரிக்கெட்டிலும் வருமானம் வருவதால் இங்கே இருக்கிறார்கள்.. இல்லாவிடில் இத்துறையினரும் ஓடி விடுவார்கள்) ஆனால் பாவம் இப்போது  கிரிக்கெட்டும் அரசியாலாகிக் கொண்டிருக்கிறது!!
 
      
     நம்மூரில் எடுத்துக்கொண்டால் தள்ளாத வயதிலும் நான் ஆறாவது முறை தலைமை ஏற்பேன் என்று சூளுரைக்கிறார் கலைஞர். இந்த வயதிலும் அவரது உழைப்பு நிச்சயம் சாதாரணமான விஷயமல்ல என்றாலும், அந்த உழைப்பின் பயன் மக்களுக்குக்  கிடைக்கிறதா? மன்னிக்க... பொது மக்களுக்குக் கிடைக்கிறதா? இத்தனை ஆண்டுகளில் எல்லா மக்களுக்கும் அடிப்படைத் தேவைகளையாவது நிறைவேற்ற முடிந்ததா? இப்போதிருக்கும் ஆளும் கட்சிகள் இலவசமாக அல்ல- கட்டணம் வசூலிக்கும், மின்சாரத்தையாவது நிறைவாக கொடுக்கின்றனவா??
கடைசி ஏழை இருக்கும் வரை இலவசங்கள் தொடரும் என்கிறார்..... ஒரு வேளை தன்னைப் பரம ஏழை(!!) என்று சொல்லிக் கொள்வதாலோ என்னவோ?   
இலவசங்கள் கொடுப்பதன் காரணம், பெரும்பான்மை மக்கள் யாரும் தானே சம்பாதித்து முன்னேறி விடக்கூடாது என்பதால தானே! அந்த இலவசங்களைக் கொடுப்பது மக்களின் வரிப் பணத்தில்..அதிலும் இலவச  டிவி கொடுத்ததால் தங்கள் பேரன்களுக்கு கேபிள் கனெக்சன் மூலம் பல்லாயிரம் கோடிகள் வருமானம் என்று எல்லாரும் சுட்டிக்காட்டி விட்டார்கள்..இப்போது தமிழக அரசின் கடன் ஒரு லக்ஷத்து பத்தொன்பதாயிரம் என்று வல்லுனர்கள் சொல்கிறார்கள்.இதன் வட்டித் தொகையே இப்போது பதினாலாயிரம் கோடியாம்.. இது பொது மக்கள் தலையில். ஆங்கிலத்தில் சொல்வார்களே: யாருக்கும் இலவச மீன் கொடுக்காதீர்-மீன் பிடிக்கக் கற்றுக்கொடுங்கள என்று.... இதை யாராவது சொல்ல மாட்டார்களா?    
      
        அதாவது இந்த நாட்டில் உழைப்புக் கேற்ற சம்பாத்தியம் கொடுக்க பணம் இருக்கிறது., எல்லா செல்வங்களும் இருக்கின்றன... ஆனால் அவை யாருக்குப் போக வேண்டுமோ அவர்களுக்குப் போவதில்லை!! ஆனால், ஆளும் சிலரால் அவை எல்லாம் கறுப்பாகி வெளி நாடுகளில் பதுக்கப்படுகிறது. வெளி நாடுகளில் பதுக்கப் பட்டிருக்கும் தொகை கிட்டத்தட்ட ஒரு லக்ஷத்து எழுபத்தி ஐந்தாயிரம் கோடிகள் என்று மாய்ந்து மாய்ந்து எழுதுகிறார்கள் கணக்கியல் வல்லுனர்கள். இது குறித்த விபரங்களை அயல் நாட்டு வங்கிகள் கொடுத்தாலும, பகிரங்கமாக வெளியிட முடியாது என்று தைரியமாக சொல்கிறது மத்திய அரசு!! கேவலம்!!  
யாரேனும் என் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு அயர்ன் கடை வைத்திருந்தவன்,ஒரு எலக்ட்ரீசியன்,டிவி ரிப்பேர் பண்ணுபவன், ஆட்டோக்காரன் யாராவது (அரசியல்வாதி ஆகாமல்- அதே தொழிலில்) நல்ல நிலை அடைந்தான் என்று சுட்டிக் காட்டுங்களேன் பார்ப்போம்..
உடனே யாரும் இப்போது மென்பொருள் துறை வல்லுனர்கள் நம் நாட்டில் சம்பாதிக்கவில்லையா என்று கேட்காதீர்.. ஒரு பக்கம் மட்டும் அடையும் வளர்ச்சி..  அதன் பெயர் வளர்ச்சி அல்ல... வீக்கம்,,  அது வியாதி.
     
       ஐந்து முறை முதல்வர் என்ற தலைமை ஏற்றவராலும், பெரும்பாலான காலம் சுதந்திர இந்தியாவை ஆண்ட காங்கிரசாலும் இந்த நாட்டுக்கு என்ன நன்மை செய்து விட முடியும்? அல்லது என்ன நன்மை செய்தார்கள்?(செய்யவும் மாட்டார்கள் - அதற்காகத்தான் மொழி வாரியாக, ஜாதி வாரியாக,புதுப் பெயர்கள் எல்லாம் சூட்டி மக்களை ஏமாற்றிக் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்) தானும் தன் வகையறாக்களும் கொழுத்தார்கள்..  வெறும் பெருமை பீற்றிக்கொள்ளலாம்... அவ்வளவே!!

           எப்போது நம் நாட்டின் மூளைகளை வெளிநாட்டுக்குச் சென்று விற்கும் நிலைமையை மாற்றப் போகிறோமோ அன்று மாற்றம் தொடங்கியதாகக் கொள்ளலாம்.அதற்கான காலம் தானே வருமோ அல்லது எகிப்து,லிபியா மாதிரி ஒரு புரட்சி/ சிவில் வார் வந்த பின் வருமோ!!

         அதிக காலம் தலைமை ஏற்பது பெருமை அல்ல.. நன்மைகள் செய்வதில் சாதனை செய்து அதிக காலம் தலைமை திணிக்கப்படும் நிலை அடைதல்தான் பெருமை..  

             (நரேந்திர மோடியும், நிதிஷ் குமாரும் ஒரு வேளை அந்த நிலை அடையகூடும் !)    

எவ்ளோ அடிச்சாலும் தாங்கறான்... இவன் ரொம்ப நல்லவன்...

சில ஆண்டுகளுக்கு முன்பு சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்வி, "ராஜாத்தி அம்மாள் யார்?' அதற்கு முதல்வர் கருணாநிதி அளித்த சாதுர்யமான பதில், "என் மகள் கனிமொழியின் தாய்'. தர்மசங்கடமான ஒரு கேள்வியை எளிமையாக, சொல்வன்மையால் கருணாநிதி எதிர்கொண்ட அழகை எதிர்க்கட்சியினரும்கூட ரசிக்கவே செய்தார்கள். இரு நாள்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சிக்குத் தமிழக முதல்வர் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், கலைஞர் தொலைக்காட்சி தொடர்பாக ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அளித்த பதில்: "கலைஞர் டி.வி. கருணாநிதிக்குச் சொந்தமானது அல்ல. கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் அதில் பங்குதாரர்களாக இருக்கிறார்கள்' அவ்வளவே!
 
 
 
இப்போதும் அதே சாதுர்யத்துடன் தமிழக முதல்வர் பதிலளித்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அப்போது ரசித்ததுபோல இப்போது அவரது பதிலை ரசிக்க இயலவில்லை. முந்தைய பதிலின் பின்புலத்தில் ஒரு தனிநபரின் அன்பின் விரிவும் ஆழமும் இருந்தது. இப்போதைய பதிலின் பின்புலத்தில் பொதுமக்களின் பணம், சட்ட விதிமீறல், முறைகேடு, அரசியல் ஆதாயம் எல்லாமும் வெட்டவெளிச்சமாக இருக்கிறது. ஒரு தனிநபரின் மனைவியும் மகளும் தனிப்பட்ட முறையில் சொத்து வைத்திருப்பது புதிதல்ல. முடியாத செயலும் அல்ல. அது ஒருவகையில் பூர்வீகச் சொத்தாக இருக்கலாம். அல்லது கணவன், தந்தை வழியாகக் கிடைத்ததாக இருக்கலாம். அல்லது அவர்கள் வணிகம் நடத்தியோ, நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்தோ சம்பாதித்ததாகக்கூட இருக்கலாம். அதேவேளையில், இத்தகைய நடவடிக்கைகளில் அந்த மகளோ அல்லது மனைவியோ சட்டவிதிகளை மீறியிருந்தால், பொருளாதாரக் குற்றம் செய்திருந்தால், அவர்களைத்தான் சட்டம் தண்டிக்குமே தவிர, கணவரையோ அல்லது தந்தையையோ அல்ல என்பதும் எல்லோரும் அறிந்ததுதான்.மகள் 20 விழுக்காடு பங்குகள் வைத்திருக்கிறார், மனைவி 60 விழுக்காடு பங்குகள் வைத்திருக்கிறார் என்றால், அதற்கான பணம் ரூ.214 கோடியை கடனாகப் பெற்று வட்டியுடன் கடனைச் செலுத்திவிட்டார்கள் என்றால், நல்லது. அப்படியே ஆகட்டும். ஆனால், யாரோ ஒருவரால் எந்தவித அடமானமும் இல்லாமல் இவ்வளவு பெரிய தொகை கடனாகக் கொடுக்கப்பட்டது ஏன்? கருணாநிதி முதல்வராக இல்லாமல் இருந்திருந்தால், அவரது கட்சியினரான ஆ. ராசா மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இல்லாமல் இருந்திருந்தால், அந்த நிறுவனம் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டின் மூலம் லாபம் அடைவதாக இல்லை என்றால், கலைஞர் தொலைக்காட்சிக்கு கடன் கொடுத்துக் கைதூக்கிவிட முன்வந்திருக்குமா என்கிற கேள்விக்கும் முதல்வர் கருணாநிதி பதிலளித்திருக்க வேண்டுமே, ஏன் செய்யவில்லை?கனிமொழி மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வுசெய்யப்பட்டபோது, கலைஞர் டி.வி. செயல்பட்டுக் கொண்டிருந்தது. அவர் அதில் பங்குதாரர் என்றால், அதனை உரிய படிவத்தில் தெரிவித்திருந்தாரா? அவை கடன்தான் என்பதைக் குறிப்பிட்டிருந்தாரா? முதல்வர் கருணாநிதியின் சொத்து மதிப்பு ரூ. 4.92 கோடி என்றால், தயாளு, ராஜாத்தி இரு மனைவிமார்களின் மொத்தச் சொத்து மதிப்பு ரூ. 39.42 கோடி. இப்படியிருக்க, இந்தச் சொத்து மதிப்பைக் காட்டிலும் 5 மடங்கு அதிகமாக ரூ. 214 கோடி கடன், எந்த அடமானமும் இல்லாமல், அநியாய வட்டி என்றாலும் பரவாயில்லை, யாராவது தருவார்களா?மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற மனிதர், தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா புறப்படும்போது, அவரது சேவையை நினைவுகூர்ந்து ஒரு பாராட்டுவிழா நடத்தப்படுகிறது. விழாவை ஏற்பாடு செய்தவர்கள், காந்தியின் மனைவி கஸ்தூரிபா அம்மையாருக்கு சில நகைகளைப் பரிசாக அளிக்கின்றனர். அந்த நகைகளைப் பொதுக்கணக்குக்கு நன்கொடையாக அளித்து விடு என்று மனைவிக்குச் சொல்கிறார் காந்திஜி.கஸ்தூரிபா மறுக்கிறார். ""இவை எனக்காக அளிக்கப்பட்ட நகைகள்; உங்களுக்கானது அல்ல. இதைத் தர மாட்டேன்''.ஆனாலும் காந்திஜி சொல்கிறார். ""கஸ்தூரிபா என்பதற்காக அளிக்கப்பட்ட நகைகள் அல்ல அவை. அவர்களுக்கு உதவிகள் செய்த என்பொருட்டு உனக்கு அளிக்கப்பட்ட பரிசு. அவை உனக்கானவை அல்ல'' என்று சொல்லி வலுக்கட்டாயமாகப் பறித்து பொதுக்கணக்கில் சேர்க்கிறார்.
 
தயாளு அம்மாள் தனது மனைவி என்று ஒத்துக் கொள்கிறார். கனிமொழி தனது மகள் என்பதையும் ஒத்துக் கொள்கிறார். தனது சொத்துக் கணக்கில் மனைவியின் சொத்துகளையும், துணைவியின் சொத்துகளையும் பட்டியலிட்டுச் சமர்ப்பிக்கிறார். அவர்கள் பங்குதாரர்களாக உள்ள கலைஞர் தொலைக்காட்சியின் அலுவலகத்தைக் கட்சித் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இயங்க அனுமதிக்கிறார். அந்தத் தொலைக்காட்சிக்குத் தனது பெயரைச் சூட்டி மகிழ்கிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இன்னின்ன என்பதுவரை தனது ஆலோசனைப் பங்களிப்பையும் தந்து உதவுகிறார். ஆனால், கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர்களாகத் தனது மனைவியும் மகளும் இருப்பதைத் தவிரத் தனக்கும் அதற்கும் தொடர்பே இல்லை என்று நாகூசாமல் கூறவும் செய்கிறார்.எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்; இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்? "கடற்கரையில் காற்று வாங்கும் அண்ணாவிடம் இதையெல்லாம் கூறி வருந்துவதைத் தவிர, வேறென்ன செய்ய?' அப்படி ஓர் அண்ணா, அவருக்கு இப்படி ஒரு தம்பி!
நன்றி:  தினமணி  தலையங்கம்.
எதையெல்லாம் தாங்குவது? 
 
-சகமனிதன் - இவன் உங்களில் ஒருவன்