நன்றி!!

தொடர்ந்து வந்து கட்டுரைகளைப் படித்து பின்னூட்டமிடும்- பின்னூட்டமிடாத அனைவருக்கும் நன்றி.

கடமை

நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்     
Showing posts with label உதவி. Show all posts
Showing posts with label உதவி. Show all posts

Tuesday, May 24, 2011

ஏழை மாணவியின் கல்விக்கு உதவிய கோவை கமிஷனர் சைலேந்திரபாபு

கோவை: மேற்படிப்பு படிக்க வசதி இல்லாத ஏழை மாணவிக்கு கோவை போலீஸ் கமிஷனர் சைலேந்திர பாபு உதவினார்.

Thursday, May 19, 2011

நீரஜ் பாஃலோ அப்



சென்னை அரசு பொதுமருத்துவமனையில் ‘இரத்தப்புற்று நோய்”க்கான
சிகிச்சைபெறும் சிறுவன் நீரஜ்’ஜுக்கு உதவ முன்வந்துள்ள என் வாசகர்களுக்கு மனங்கனிந்த நன்றி. 

சிறுவனின் தாய் திருமதி சுமதியின் கைப்பேசி எண், மற்றும் அவரது வங்கிக் கணக்கு எண் இவற்றை கொடுத்துள்ளேன்.

நீங்களும், உங்கள் நண்பர்களும் செய்யும் பேருதவியால் அச்சிறுவன்
முற்றிலும் நலம்பெற்று மீண்டுவர உங்கள் பிரார்த்தனைகளும் உடன்
நிற்கட்டும்.

திருமதி சுமதி : கைப்பேசி எண்: 9003563388
வங்கிக் கணக்கு எண்:
S.B.A/c No. 29755
Indian Overseas Bank, Salem, Tamilnadu.

கிரிஜா மணாளன்
Editor
www.smspoets-tamil.blogspot.com
www.smskavignarkal-world.blogspot.com
(ஆர்.நந்தகோபால்)
கைப்பேசி எண்: 9952422383. 

Wednesday, April 27, 2011

சிறுவனின் உயிர்காப்போம்!!!!!!


வணக்கம்.
தமிழ்நாடு, சேலம் நகரைச் சேர்ந்தவர் 43 வயது இளம்பெண் கவிஞர் சுமதி.
பி.காம் பட்டதாரி. கைப்பேசி குறுந்தகவல் (Mobile SMS) வாயிலாக கவிதைகளை நூற்றுக் கணக்கானோருக்கு அனுப்பி இலக்கியப்பணியாற்றும் படைப் பாளர்களை ஒருங்கிணைத்து, நான் அவர்களை இணையத் திற்கும் அழைத்து வரும் ஊக்ககுவிப்புப் பணியில் ஈடுபட்ட போது, இவர் எனக்கு அறிமுகமானவர். இணைய தளத்தில் என்னுடைய கவிதை வலைத்தளங்களிலும், வார்ப்பு. காம் கவிதைத்தளத்திலும் தனது படைப்புகளை வழங்கி புகழ் பெற்றுவரும் இவர் தன்னம்பிக்கையின் சிகரம்!


3 ஆண்டுகளுக்கு முன் கணவனை இழந்த இவர், தனது ஒரே வாரிசான 14 வயது மகனுக்கு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஏற்பட்டுள்ள “இரத்தப் புற்று” (Acute lymphoblastic leukemia - Blood cancer) நோயைக் குணப் படுத்தி அவனது உயிரைக் காப்பாற்றும் நோக்கத்துடன் தனது மறுமணத்தையும் புறக்கணித்துள்ளவர். 

வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பெரும் சோதனைகளை தன்னந்தனியே ஒரு பெண்ணாலும் எதிர்த்து நிற்கமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இவர், ஆசாரமுள்ள பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவராயினும், தான் ஒரு கைம் பெண் என்ற உணர்வே தன்னுள் வந்து, தனது மகனின் எதிர் கால வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது என்ற எண்ணத்துடன் வாழ்பவர்.

இவரது மகன் நீரஜ், தனது நோயின் தொடர் சிகிச்சை காரணமாக தனது பள்ளிப் படிப்பையும் தொடரமுடியாமல் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறான். “படிப்பில் ஆர்வமும், திறமை யும் கொண்ட மாணவன். இவனது நோய் விரைவில் குணமாக இரக்கமனமுள்ளவர்கள் பிரார்த்திப்போம், நம்மாலியன்ற உதவிகளைச் செய்வோம்.” என கூறுகிறது இவனது பள்ளி யில் கொடுக்கப்பட்டுள்ள சான்றிதழ். கடந்த மார்ச், 2010 லிருந்து இந்நோய்க்கு சிகிச்சை பெற்றுவரும் இச்சிறுவனுக்கு, தொடர் சிகிச்சை மேற்கொள்ள பொருளாதாரமின்றி வருந்தும் இந்த தாய், சென்னை அரசு பொது மருத்துவமனையில் அளிக்கும் புற்றுநோய்க்கான இலவச சிகிச்சையினை நம்பியிருக்கிறார். கடந்த ஓராண்டுக் காலம் மாதமொருமுறை சேலத்திலிருந்து சென்னை வந்து, சென்னை பொது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று திரும்பிய நிலையைத் தொடர்ந்து,  இப்போது கடந்த 23.3.2011 முதல் மருத்துவ மனையிலேயே (நாளொன்றுக்கு ரூ.600/- அறை வாடகை) தங்கியிருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சிறுவனுக்கு அவ்வப்போது இரத்தம் ஏற்றுவதற்கு இரத்ததான அன்பர்களும் உதவிவருகிறார்கள். இப்போது நடந்துவரும் Chemotheraphy சிகிச்சையைத் தொடர்ந்து, முழுநிவாரணம் பெற, உடலில் முழுவதும் புதிய இரத்தமாக மாற்ற, சில லட்ச ரூபாய்கள் செலவாகும் என்ற நிலையில் அந்த சிறுவனுக்கு உதவி தேவைப்படுகிறது. அவனது நோய் விரைவில் குணமடைய நம்மாலியன்ற பிரார்த்தனைகளைச் செய்வது மட்டுமின்றி, இயன்ற நிதியுதவிகளையும், இது போன்ற நோயாளிகளுக்கு உதவும் சமூகநல அமைப்புகளின் முகவரிகளையும் தந்து உதவவேண்டுமென்ற எதிர்பார்ப்புடன் ...... நமது குழுமத்தில் இச்செய்தியைப் பதிவிட்டுள்ளேன். (சிறுவன் நீரஜ்’ ஜின் கடந்தகால மருத்துவ அறிக்கைகளையும், பள்ளி தலைமையாசிரியரின் சான்றிதழையும் இத்துடன் உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளேன்)
நமது மனிதநேயம் ஓர் சிறுவனின் எதிர்கால வாழ்க்கையைக் காப்பாற்றட்டும்!

- கிரிஜா மணாளன் (girijamanaalanhumour@gmail.com)

More Photos